ஈழத்தமிழர் வலியும், தமிழகத்தின் மீதான நம்பிக்கையும்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சனா, அண்
மையில் ஆற்றிய உரை ஒன்று தமிழகம் மற்றும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சி பொங்கப் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது ஈழத்தமிழர்களின் கடைசி நம்பிக்கை எனக் கூறியதுடன், தங்கள் பகுதிகள் அலட்சியப்படுத்தப்பட்டால், நெடுந்தீவு, கச்சத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளை இந்தியாவுக்குத் 'தண்ணி வார்த்துக் கொடுக்கவும்' தயாராக இருப்பதாகக் கூறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறார். ராமநாதன் அர்ச்சனா தனது உரையின் தொடக்கத்திலேயே, தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-ஐத் தாண்டி, ஒரு முறை மேலே சென்று விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதை தனது இரு கண்களாலும் காண விரும்புவதாக அவர் கூறினார். இதை வெறும் அரசியல் கனவாக மட்டும் அவர் முன்வைக்கவில்லை. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோர் இறுதியாகத் தமிழ் ஈழத்தைக் காண வேண்டும் என்ற ஆசையுடன் சிங்களக் காடையர்களால் கண்களைக் குத்திக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவத்தை நினைவுபடுத்தி, தனது ஆசையையும், விஜயின் முதலமைச்சர் கனவையும் இணைத்துப் பேசினார்.
'எனக்கு கடைசி ஆசை என்ன?' என்று கேட்டால்,
'என்னுடைய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்' ஆக இருப்பதை எனது இரண்டு கண்களாலும் பார்க்க வேண்டும் என்பதுதான் எனக் கூறி, ஒரு தலைமுறையின் வேதனையையும், கனவையும் விஜயின் அரசியல் பயணத்துடன் இணைத்தார்.

0 கருத்துகள்